உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

பண்ருட்டி பள்ளியில் நூலகத்துறை போட்டி

பண்ருட்டி :

                  பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் வட்ட அளவில் "நமது உலகம் நூலகம்' என்கிற தலைப்பில் கட்டுரை,பேச்சு, வாசகம் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.  உதவி தலைமை ஆசிரியர்கள் பற்குணன், வடிவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் சுப்ரமணியன், ஏழுமலை, சுசீலா, சற்குணாம்பாள், சுமதி, கிரிஜா, ஆண் டாள், ஜெயகுமாரி நடுவர்களாக செயல் பட்டனர்.  போட்டியில் முதல்பரிசை ஜான்டூயி பள்ளி மாணவி சவுமியாவும், 2ம் பரிசு நெய்வேலி ஐவகர் பள்ளி மாணவன் குமணன், 3ம் பரிசை திருத்துறையூர் பள்ளி மாணவன் பிரவீன்குமார் பெற்றனர். என்.எஸ்.எஸ்., ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior