உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

தொழுநோய் குறித்து வினாடி வினா

பண்ருட்டி :

                   பண்ருட்டி அரசு மருத்துவமனை சார்பில் மேலப்பாளையம் நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு தொழுநோய் வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.

                    நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மலர் கொடி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார்.  மாவட்ட நலக்கல்வியாளர் நாகராசன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கு தொழுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தொழுநோய் ஒழிப் பில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின் நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற மாணவி சரண்யா, 2ம்பரிசு பெற்ற மாணவன் வெங்கடேசனுக்கும் மற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ஞானமணி செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior