உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :

                கடலூர் நகராட்சி சார்பில் 67 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

                     கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் 67 மையங்களில் நடந்தது. மேலும் நடமாடும் குழு மூலம் நகரின் பல்வேறு இடங்களுக்கு வீடு தேடி சென்று சொட்டு மருந்து போடப்பட்டது. கடலூர் பஸ் நிலைய முகாமை டி.ஆர்.ஒ., நடராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர் மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச் செல்வன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரகுமார், துணை இயக்குனர் மீரா, நகராட்சி கமிஷனர் குமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், தாசில்தார் தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
  திட்டக்குடி: 

                  வதிஷ்டபுரம் துணை சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத்தார். ஈ.கீரனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திருமாவளவன் போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் கமலி, கவுன்சிலர்கள் செல்வம், செந்தில் குமார், ராஜேந்திரன், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு உள் ளிட்டோர் பங்கேற்றனர். கோழியூரில் நடந்த முகாமை கவுன்சிலர்கள் ராஜாஅலெக்சாண்டர், செல்வி துவக்கி வைத்தனர்.

 பெண்ணாடம்: 

                      பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை பேரூராட்சி தலைவர் அமுதலட்சுமி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் காதர், தி.மு.க., நகர செயலாளர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் வலம்புரிசெல்வம், தமிழரசன் மருந்து வழங்கினார். பண்ருட்டி: நகராட்சி சார்பில் 36 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது. பஸ் நிலைய முகாமை சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷ்னர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி, சுகாதார அலுவலர் பாலசந்திரன், ஆய்வாளர் சுதாகரன், மேற் பார்வையாளர் கொளஞ்சியப் பன், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

சிறுபாக்கம்: 

                    நல்லூரில் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.  ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன் சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் திவிநாயகம், டாக்டர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சிறுநெசலூரில் வட்டார காங்., இளைஞரணி தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.  செவிலியர் புஷ்பாவதி, அங்கன்வாடி பணியாளர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிள்ளை: 

                   மேலத்திருக்கழிப்பாலையில்  பொன்னுசாமி, பிச்சாவரத்தில் வாசுசரவணன், கோவிலாம் பூண்டியில்  சிவசுப்ரமணியன், மீதிகுடியில்  சின்னதுரை, தில்லைவிடங்கில் மோகன்தாஸ், நஞ்சைமகத்துவாழ்க்கையில்  தனசேகரன், கீழ் அனுவம்பட்டில் மனோகர், நக்கரவந்தன்குடியில் குலசேகர், உத்தமசோழமங்கலத்தில் ஜெயசுதா, கணக்கரப் பட்டில் வனிதா, பின்னத்தூரில் மாலதி, சி.முட்லூரில் தவமந்திரிவெங்கடேசன், கொத்தங்குடியில் வேணுகோபால், மேல் அனுவம்பட்டில் லட்சுமணன் துவக்கி வைத்தனர்.

நெல்லிக்குப்பம்:

            நகராட்சி சார்பில் நடந்த முகாமை தாசில்தார் பாபு துவக்கி வைத்தார். நகராட்சி டாக்டர் மகேஷ்குமார், துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய்வாளர் ஹரிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்: 

                  நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள பள்ளி, மருத்துவமனை, அங்கன்வாடி, பஸ் நிலையம் ,சத்துணவு மையம் உள்ளிட்ட 23 மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டது.  நெல்லுக்கடை தெரு மகப்பேறு மருத்துவமனையில் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கமிஷனர் ஜான்சன், இன்ஜினியர் மாரியப்பன்,  நகர் நல அலுவலர் கோவிந்தன், டாக்டர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior