உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாணவர்களுக்கு வரவேற்பு

கடலூர் :

              புவி வெப்ப மயமாதலை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திலிருந்து வந்த என்.சி.சி., மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு கடலூரில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

                      விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்.சி.சி., மணவர்களின் 6 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 6ம் தேதி கல்லூரி வளா கத்தில் துவங்கியது. இப் பேரணி மூலம் புவி வெப் பமயமாதலை தடுப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, ரத்த தானம் ஆகியவைகளை விளக்கி 480 கி. மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றனர். என்.சி.சி., அதிகாரி மேஜர் இளங்கோவன் தலைமையில் புறப்பட்ட பேரணி 25 மாணவர்களுடன் மதுரை, திருப்பத் தூர், புதுக்கோட்டை, தஞ் சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக நேற்று கடலூர் வந்தது. கடலூரில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முன்னாள் தலைவர் வக் கீல் அருணாசலம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, சுரேஷ் ஜெயின், உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நேற்று மதியம் புறப்பட் டது. புதுச் சேரி, விழுப்புரம், விருத் தாசலம், திருச்சி, திண்டுக் கல் வழியாக வரும் 12ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior