உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

கர்நாடக தக்காளி வரத்து பண்ருட்டியில் அதிகரிப்பு

பண்ருட்டி :

                பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

            தமிழகத்தில் தற்போது தக்காளி சீசன் இல்லாததால், ஆந்திர மாநிலத்திருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள தெலுங்கானா கலவரத் தால் தக்காளி வரத்து தடைபட்டதால் தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்தது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தாவணிக்கரை பகுதியில் தக்காளி அறுவடை துவங்கியுள்ளது. இங்கிருந்து பண்ருட்டி பகுதி காய்கறி வியாபாரிகள் தக்காளியை கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளனர்.  கர்நாடகாவிலிருந்து மரப்பெட்டிகளில் கொண்டு வரப்படும் தக்காளியை பிளாஸ்டிக் டப் பாக்களில் (சுமார் 15 கிலோ) மாற்றி 150 ரூபாயிற்கு விற்பனை செய் கின்றனர்.  சில்லரை விற்பனையில் கிலோ 14 ரூபாயிற்கு விற்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior