உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

மாட்டு வண்டிகள் மீது அரசு பஸ் மோதல்: 2 மாடுகள் பலி

பரங்கிப்பேட்டை :

              சிதம்பரம் அருகே மணல் ஏற்ற சென்ற மாட்டுவண்டிகள் மீது அரசு பஸ் மோதி இரண்டு மாடுகள் இறந்தன. 3 பேர் பலத்த காயமடைந்தனர். புதுச்சத்திரம் அருகே வில்லியநல்லூரை சேர்ந்தவர்  பன்னீர்செல்வம்(27), தேசிங்குராஜன்(25), கணேசன்(30). இவர்கள் ஆதிவராக நல்லூர் மணல் குவாரியில் மணல் ஏற்ற நேற்று அதிகாலை மாட்டு வண்டிகள் ஓட்டி சென்றுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மாட்டு வண் டிகள் மீது மோதியது.

            இதில் பன்னீர் செல்வம், தேசிங்கு ராஜன்  வண்டியின் வலது பக்க இரண்டு மாடுகள் இறந்தன. மற்ற மாடுகள் காயமடைந்தன. விபத்தில் பன்னீர் செல்வம், தேசிங்குராஜன், கணேசன் ஆகியோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் ஒகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.  இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior