உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

அரசின் நலத்திட்டங்கள் வழங்காமல் சி.என்.பாளையம் ஊராட்சி புறக்கணிப்பு

நடுவீரப்பட்டு :

           சி.என்.பாளையம் ஊராட்சிக்கு அரசின் நலத் திட்டங்கள் வழங்காமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என். பாளையம் ஊராட் சிக்கு அரசின் நலத்திட் டங்களான இலவச கலர் டிவி,கேஸ் அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் போன்றவைகள் வழங்காமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.

             கடலூர் ஒன்றியத்தில் உள்ள அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில் இதுவும் ஒன்று என அதிகாரிகள் காரணம் கூறிவந்தனர். கடலூர் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை உள்ள பாதிரிக் குப்பம், ராமாபுரம் போன்ற ஊராட்சிகளில் அரசின் இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டு விட் டன. ஆனால் அதை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சி.என்.பாளையம் ஊராட்சிக்கு மட்டும் இதுவரை எதுவும் வழங் கப்படவில்லை.  நடுவீரப்பட்டு ஊராட் சியில் இலவச கலர்  "டிவி'க்கு டோக்கன் வழங்கி மூன்று மாத மாகியும்  இதுவரை கலர் "டிவி' வழங்கப்படாமல் உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior