உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

ஸ்ரீநெடுஞ்சேரியில் கண்ணொளி காப்போம் திட்டம்

ஸ்ரீமுஷ்ணம் :

          ஸ்ரீமுஷ்ணம் அருகே கண்ணொளி காப் போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.

               பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். ஸ்ரீநெடுஞ் சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சவுந்திர பாண்டியன், பொருளாளர் ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குலோத்துங்க சோழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி கண்களை பாதுகாப்பது குறித்து பேசினார். இதில் ஸ்ரீநெடுஞ்சேரி பள்ளியை சேர்ந்த 29 மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளியம்மை, கண் மருத்துவ உதவியாளர் மகேஷ், கிராம செவிலியர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior