உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

சிறுபாக்கத்தில் வேகமாக பரவும் விஷக்காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: மக்கள் அச்சம்

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் பகுதிகளில் பரவி வரும் விஷக்காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், மங்களூர் உள் ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக விஷ காய்ச்சல் கிராம மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.  இந்நோயால் சிறுபாக் கம் புஷ்பா (40), கண்ணன் (27), ராஜமாணிக்கம் (52), செல்வி (37), பொன்னுசாமி (50), மருதமுத்து (61) உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். நிற்கவும், நடக்கவும் முடியாமல் படுக்கையில் இருப்பதால் சிகிச்சை பெற முடியாமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

              மங்களூர், சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கிராம மக்களிடையே வேகமாக பரவி வரும் விஷக்காய்ச்சல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சிறுபாக்கம் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior