உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

நான்கு பேருக்கு கத்தி வெட்டு 10 பேருக்கு போலீஸ் வலை


நெல்லிக்குப்பம்:

             நெகாப்பீடு திட்ட கணக் கெடுப்பதில் பெயர் விடுபட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
 
                 நெல்லிக்குப்பம் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சியில் காப்பீடு திட்ட கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி தலைவரின் ஆதரவாளரான சேட்டு செய்தார். அதில் பனங்காட்டு காலனியை சேர்ந்த அஞ்சாபுலி பெயர் விடுபட்டது. ஆத்திரமடைந்த அஞ்சாபுலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேட்டுவை கத்தியால் வெட்டினர். தடுக்க வந்த மணிகண்டன், துளசிதாஸ், ஏழுமலையையும் கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அஞ்சாபுலி, மதியழகன் உட்பட 10 பேரை தேடிவருகின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior