உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

மண்ணெண்ணெய் வழங்காததால் கடலூரில் ரேஷன் கடை முற்றுகை

கடலூர் : 

                      மாலை வரை காத்திருந்தும் மண்ணெண்ணெய் வழங்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். கடலூர் பீச் ரோட்டில் சரவணபவா கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தின் மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இதன் மூலம் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.வார நாட்களில் கடை வாரியாக சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

                             உரிய நேரத்தில் மண்ணெண்ணெய் வாங்காதவர்களுக்கு அந்த மாதத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் வழங்கப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் மண்ணெண்ணெய் வாங்காத 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் பில் போடுவதற்காக ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு காத்திருந்தனர். மாலை 6 மணியாகியும் பில் போட்டு தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அங்கிருந்த ஊழியர்கள் தற்போது மண்ணெண்ணெய் இருப்பு இல்லை. இன்று வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வாங்கிக் கொள்ளுமாறு டோக்கன் கொடுத்தனர். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior