உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

இலங்கை அகதிகள் முகாமில் மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு

சின்னசேலம் : 

               சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் நடந்து வரும் பணிகளை சென்னை மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு செய்தார்.சின்னசேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை சென்னை மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலக தனித் துணை ஆட்சியர் ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். முகாம் தலைவர் மோகன் வரவேற்றார். முகாமில் நடந்து வரும் பக்க கழிவு கால்வாய், குடிநீர், சாலை பணிகளை தனித் துணை ஆட்சியர் ரகுபதி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆர்.டி.ஓ., வனிதா, தாசில்தார் மணி, பேரூராட்சி செயல் அலுவலர் கபினி, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் செல்வராணி, வி.ஏ.ஓ., ராஜவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior