உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

அ‌ந்தமா‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

                     அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணிக்கு கடுமையான ‌நில நடு‌க்க‌ம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையிலு‌ம் உணரப்பட்டது. அந்தமான், ஒரிசா போன்ற இடங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றி உடனடி தகவல் வரவில்லை. அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள தீவுகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். போர்ட் பிளேர் நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பூமி அதிர்வின் மையம் இருந்தது. இந்த பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும் 2 பேர் காயம் அடைந்ததாகவும், சில வீடுகளின் ஓடுகள் சரிந்து விழுந்ததாகவும், அந்தமான் தீவின் தலைமை செயலர் விவேக் ராய் செ‌ய்‌தியா‌ள‌ர்‌க‌ளிட‌மதெரிவித்தார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior