உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு

கடலுர்:

                 ஓய்வூதியர்கள் அனைவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் பா.வெங்கடேசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 2010-11-ம் ஆண்டுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஓய்வூதியக் கொடு ஆணைப் புத்தகத்துடன், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்குச் சென்று, நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும். கருவூல அலுவலரின் நேர்காணல் கட்டாயம் ஆகும். அவ்வாறு மஸ்டரிங்  செய்யாதவர்களுக்கு ஓய்வூதியத்தை கருவூலம் நிறுத்தி வைக்க ஏதுவாகும். குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவித் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் கால அவகாசம் 30-6-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இச்சலுகைத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்கள் விரும்பினால் சேரலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior