உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

பண்ருட்டி பகுதியில் மின் வெட்டு அறிவிப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி நகரம், கிராமப்புற பகுதியில் மின்நிறுத்தம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
                        பண்ருட்டி கிராமப்புற மின்பாதையில் மும்முனை மின்சாரம் முதல் பிரிவிற்கு காலை 6 மணி முதல் 12 மணிவரையிலும் இரவில் 3 மணி முதல் 6 மணிவரை வழங்கப்படும். 2ம் பிரிவிற்கு பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரையிலும், இரவில் 12 மணி முதல் 3 மணிவரை வழங்கப்படும். மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் லிங்க்ரோடு, விழமங்கலம், தட்டாஞ்சாவடி பீடரில் உள்ள பண்ருட்டி நகர் பகுதிகளில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

                திருவதிகை பீடரில் உள்ள திருவதிகை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சீரங்குப்பம்,தி. ராசாப்பாளையம் மற்றும் பூங்குணம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மணி நகர், வ.உ.சி. நகர், எல்.என்.புரம், திருவள்ளுவர் நகர், கந்தன்பாளையம், முத்தையா நகர், பூங்குணம் மற்றும் சிவராமன் நகர் பகுதிகளில் காலை 6மணி முதல் 9 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior