உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயனின்றி பாழாகி வருகிறது

நெல்லிக்குப்பம் : 

              கீழ்அருங்குணம் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்படுத்தாமல் பாழாகி வருகிறது.
 

                      தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. சுய உதவிக்குழு பெண்கள் சந்தித்து பேச இடவசதியில்லாமல் சிரமப்பட்டனர். உள்ளாட்சிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே இக்கட்டடத்தை பயன்படுத்தினர். அதன்பிறகு பயன்படுத்தாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சுய உதவிக்குழு தலைவி வீட்டிலேயே கூட்டத்தை நடத்துகின்றனர். இதனால் கட்டடம் பாழாகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் அவர்களுக்காக கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior