உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

கல்விக்கடன் வழங்கக் கோரி மா.கம்யூ., உண்ணாவிரதம்


திட்டக்குடி : 

               கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
                     பெண்ணாடம் அடுத்த இறையூர் கிளை பஞ்சாப் நேஷனல் வங்கி எதிரில் கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் பயனாளிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கிளை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்டக்குழு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு நாராயணன், மாவட்டக்குழு காமராஜ் பேசினர்.இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கல்விக் கடன் வழங்கிட வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், வங்கி மேலாளர் உறுதியளித்ததன் பேரில் கைவிடப்பட்டது. ஆனால் மூன்று மாதமாகியும் இதுவரை எவருக்கும் கல்விக் கடன் வழங்காததை கண்டித்து பேசப்பட்டது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior