உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

சத்துணவு ஊழியர்கள் குமராட்சியில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                 குமராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். சம்பத், நலங்கிள்ளி, குமாரராஜா, ரகுமான், தூய மணி முன் னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் மச்சேந்திரன், அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விஜயலட்சுமி, வெற்றிமணி, சுமதி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோகன்ராஜ் நன்றி கூறினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior