உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

பணி நிரந்தரம் செய்யுமாறு பிரிவு எழுத்தர்கள் வலியுறுத்தல்

கடலூர் : 

               அரசுத்தேர்வுகள் துறையில் 14 ஆண்டாக பணியாற்றி வரும் பிரிவு எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்ய துணை முதல்வருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறையில் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக கடலூர் மண்டலத்தில் 9 பேரும், வேலூர் மண்டலத்தில் 8 பேரும், தினக் கூலி பணியாளர்கள் 6 பேரும், சென்னை தலைமையகத்தில் 6 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

                      இவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற் போது நாளொன்றுக்கு 150 வழங்கி வருகிறது. இதே துறையில் தொடர்ந்து 14 ஆண்டு களாக பணியாற்றி வருவதால் வயது வரம்பை கடந்து வேறு அரசு பணிக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி கடந்த 10 ஆண்டாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை அன்று சட்டசபை வளாகத்தில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior