உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியகோஷ்டி, ஆதிவராகநல் லூர், அருண்மொழித்தேவன், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை உட்பட 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. சின்னகுமட்டி ஊராட்சியில் ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன் கணக்கெடுக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர் நாகப் பன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்: 

                   எய்தனூரில் நடந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ. நடராஜன் ஆய்வு செய்தார். துணை தாசில்தார் நாசிக் இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ரபீக்குதீன் உடனிருந்தனர். நடுவீரப்பட்டு: நைனாப்பேட்டை பகுதியில் நடுவீரப்பட்டு வி.ஏ.ஓ., குப்புசாமி, ஊராட்சி உதவியாளர் ராஜேந்திரன்,மக்கள் நலப் பணியாளர் அஞ்சாபுலி ஆகியோரும், சி.என்.பாளையத்தில் வி.ஏ.ஓ., ஜோதிமணி, மக்கள் நலப் பணியாளர் வேல்முருகன், ஊராட்சி உதவியாளர் ரவி ஆகியோர் கணக்கெடுப்பு பணியினை செய்து வருகின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior