உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

பென்னாகரத்தில் வெற்றி: தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கடலூர்:

                    பென்னாகரம் இடைத்தேர்தல் வெற்றியை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து கடலூர் தி.மு.க., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் சேர்மன் தங்கராசு, நகர தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் தமிழரசன், கணபதி, இளங்கோ, சம்பத், கோவிந்தசாமி, வனிதா, கோவலன், பூங்காவனம் மற்றும் தொண் டர்கள் பட்டாசு வெடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நெல்லிக்குப்பம்: 

                  எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் பழனிவேல், அங்கமுத்து, பலராமன், கவுன்சிலர்கள் தமிழ் மாறன், விஜயகுமார், வார்டு செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மதியழகன், ரமேஷ், மனோகர் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அவைத்தலைவர் முகமது அனீப், துணை செயலாளர் தனகோடி, நந்தகோபால், குணசேகரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர். திட்டக்குடி: நகர செயலாளர் பரமகுரு தலைமையில் நகர தலைவர் தங்கமணி, துணை செயலாளர் துரை, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், கவுன்சிலர் செந்தில், ராஜேந்திரன், ராசாத்தி உள்ளிட்டோர் பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior