உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கியது ஸ்கிரைப் முறையில் 17 பேர் எழுதினர்

கடலூர்:

                  நேற்று துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 96 மையங்களில்  41 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. அதில் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 865 மாணவர்கள் உட்பட 36 ஆயிரத்து 592 பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிரிவிலும், மெட்ரிக் பிரிவில் 2,727 மாணவர்கள் உட்பட 4,865 பேர்  என மொத்தம் 41 ஆயிரத்து 457 பேர் 96 மையங்களில் தேர்வு எழுதினர்.

ஸ்கிரைப்: 


                  மாவட்டத்தில் பார்வையற்ற மற்றும் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட 17 பேர் ஸ்கிரைப் முறையில் மாணவர்கள் பதில் கூற ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். அதில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 6 பேரும், கடலூர் முதுநகர் செயின்ட் டேவிட் பள்ளியில் 7, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 2, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 1, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 ஒருவர் என 17 பேர் தேர்வு எழுதினர். தேர்வையொட்டி சி.இ.ஓ.,  அமுதவல்லி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருண்மொழித்தேவி தலைமையில் 40 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வில் 'பிட்' அடிக்கும் முறைகேடுகளில் எவரும் ஈடுபடவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior