உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

பண்ருட்டி நவீன எரிவாயு தகன மேடை: அனாதை பிணத்தை எரித்து சோதனை

பண்ருட்டி:

               பண்ருட்டியில் 43 லட் சம் ரூபாய் செலவில் கட் டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை  நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். பண்ருட்டி நகராட்சி சார்பில் கெடிலம் ஆற்றங்கரையில்  43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. கட்டுமான பணி முடிந்து இரண்டு ஆண்டாக பயன்பாடின்றி கிடந்த இந்த தகன மேடைக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி  காடாம்புலியூர் சமத்துவபுரம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் நவீன எரிவாயு தகன மேடையை திறந்து வைத் தார். இருப்பினும் தகன மேடை பயன்பாட்டிற்கு வரவில்லை. 
 
                    இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி தலைமையில் நகராட்சி அதிகாரிகள்  கடலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட அனாதை பிணத்தை நவீன எரிவாயு தகன மேடையில் வைத்து எரித்து சோதித்து பார்த்தனர். அப்போது  நகராட்சி சேர்மன் பச்சையப்பன்,  பொறியாளர் சுமதிசெல்வி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், சுகாதார ஆய் வாளர்கள் சுதாகர், மணிகண்டன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior