உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,​​ மெட்ரிக்: 36,592 பேர் தேர்வு எழுதினர்


கடலூர் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி.​ தேர்வு எழுதிய மாணவிகள்.
கடலூர்:
 
                செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி.​ மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 36,592 மாணவ,​​ மாணவியர் தேர்வு எழுதினர்.எஸ்.எஸ்.எல்.சி.​ மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.​ கடலூர் மாவட்டத்தில் 17,865 மாணவர்களும்,​​ 18,727 மாணவிகளும் தேர்வு எழுதினர்.​ செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி.​ மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வும்,​​ மெட்ரிக் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்து இருக்கும் மொழி முதல்தாள் தேர்வும் நடந்தன. தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 96 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.​ தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி,​​ மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருண்மொழித்தேவி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior