உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

கட​லூர் அருகே மீண்​டும் கல​வ​ரம்:​ வாழை மரங்​கள் வெட்​டிச் சாய்ப்பு

கட​லூர்,:
 
              கட​லூர் அருகே வழி​சோ​த​னைப் பாளை​யத்​தில் மீண்​டும் கல​வ​ரம் வெடித்​தது.​ இதில் ஒரு வீடு சூறை​யா​டப்​பட்​டது.​ 100 வாழை மரங்​கள் வெட்டி சாய்க்​கப்​பட்​டன.​ ​க​டந்த 18-ம் தேதி தனி நபர்​க​ளுக்கு இடையே எழுந்த பிரச்னை கார​ண​மாக,​​ ​ கட​லூர் அருகே நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும் வழி​சோ​தனை பாளை​யத்​தைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும் இடையே ஞாயிற்​றுக்​கி​ழமை இரவு மோதல் ஏற்​பட்​டது.​ இதில் நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த 7 வீடு​கள் தீ வைத்து கொளுத்​தப்​பட்​டன.​ வாக​னங்​கள் சேதப்​ப​டுத்​தப்​பட்​டன.​ இது தொடர்​பாக 41 பேர் மீது கட​லூர் முது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து,​​ வழி​சோ​த​னைப் பாளை​யத்​தைச் சேர்ந்த சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்ட 39 பேரைக் கைது செய்​த​னர்.​ கை​தான சுப்​பி​ர​ம​ணி​யத்தை நீதி​மன்​றத்​தில் திங்​கள்​கி​ழமை ஆஜர்​ப​டுத்த போலீ​ஸôர் அழைத்​துச் சென்​ற​னர்.​ அவ​ரது உட​லில் காயங்​கள் இருந்​த​தால் அவரை மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கு​மாறு நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​ ​÷இ ​தற்​கி​டையே சுப்​பி​ர​ம​ணி​யத்​தின் மனைவி ஆச்சி,​​ கட​லூர் முது​ந​கர் காவல் நிலை​யத்​தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்​ளார்.​ அதில் ​ நயாக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த 17 பேர் தனது வீட்​டில் புகுந்து,​​ கண​வ​ரைத் தாக்​கி​ய​தா​க​வும்,​​ வீட்​டில் இருந்த தொலைக்​காட்​சிப் பெட்டி,​​ கணினி கரு​வி​கள்,​​ குளிர்​சா​த​னப் பெட்டி உள்​ளிட்ட பொருள்​க​ளைச் சேதப்​ப​டுத்​தி​ய​தா​க​வும்,​​ தனக்​குச் சொந்​த​மான நிலத்​தில் இருந்த 100 வாழை மரங்​களை வெட்​டிச் சாய்த்​த​தா​க​வும் கூறி​யுள்​ளார்.​ ​இந்​தப் புகா​ரின் பேரில்,​​ நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த இரு​சப்​பன்,​​ ஸ்ரீதர்,​​ சிவக்​கொ​ழுந்து உள்​ளிட்ட 17 பேர் மீது போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து உள்​ள​னர்.​ மோ​தல் கார​ண​மாக அப்​ப​கு​தி​யில் தொடர்ந்து பதற்​றம் நீடித்து வரு​கி​றது.​ போலீஸ் பாது​காப்​பும் போடப்​பட்டு உள்​ளது.​÷வ ​ழி​சோ​த​னைப்​பா​ளை​யம் கிரா​மத்​தி​னர் மற்​றும் நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்​த​வர்​க​ளி​டையே அமை​தியை ஏற்​ப​டுத்த இரு தரப்​பி​ன​ரை​யும்,​​ அரசு அலு​வ​லர்​கள் திங்​கள்​கி​ழமை பேச்சு வார்த்​தைக்கு அழைத்து இருந்​த​னர்.​ ஆனால் இரு தரப்​பி​ன​ரும் பேச்சு வார்த்​தைக்​குச் செல்​ல​வில்லை.​ இத​னால் பேச்சு வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்​டது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior