உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

நீரி​ழிவு, மார​டைப்பைக் கட்​டுப்​ப​டுத்​து​கி​றது மீன் உணவு

சிதம்​ப​ரம்:
 
                     கொடுவா மீன் உள்​ளிட்ட மீன் வகை உண​வு​கள் நீரி​ழிவு மற்​றும் மாரடைப்பு நோயை கட்​டுப்​ப​டுத்​து​கி​றது என பரங்​கிப்​பேட்டை கடல்​வாழ் உயிரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் முனை​வர் டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தெரி​வித்​தார்.​இந்​நி​கழ்ச்​சியை பரங்​கிப்​பேட்​டை​யில் உள்ள அண்​ணா​ம​லைப் பல்​கலைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் டி.பால​சுப்​பி​ர​ம​ணியன் குத்​து​வி​ளக்​கேற்றி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​
 
அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் பேசி​யது:​ 
 
                    இந்​தி​யா​வில் கொழுப்பு சத்​துள்ள உணவை அதி​கம் உண்​ப​தால் நீரி​ழிவு மற்​றும் மார​டைப்பு நோய் அதி​கம் பேருக்கு உள்​ளது.​ புர​தச் சத்​துள்ள கொடுவா மீன் உள்​ளிட்ட மீன் வகை​கள் அந்​நோய்​க​ளைத் தடுக்​கும் சக்தி கொண்​டவை.​ அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய மாண​வர் திரு​நா​வுக்​க​ரசு முதன்​மு​த​லாக கொடுவா மீன் குறித்து ஆராய்ச்​சியை மேற்​கொண்​டார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது என டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தெரி​வித்​தார்.​ நாகை மாவட்​டம் திரு​முல்​லை​வாச​லில் அமைந்​துள்ள ராஜீவ்​காந்தி நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மைய திட்ட இயக்​கு​நர் ஓய்.சி.தம்பி சாம்​ராஜ் தலைமை வகித்​துப் பேசி​னார்.​ 
 
ராஜீவ்​காந்தி நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மைய திட்ட இயக்​கு​நர் ஓய்.சி.தம்பி  பேசி​யது:​ 
 
                     வெளி​நாட்டு ஏற்​று​ம​தியை பெருக்​கும் நோக்​கில் இந்த நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மையம் தொடங்​கப்​பட்​டது.​  கொ​டுவா மீன்​களை உப்​பு​நீ​ரில் மட்​டு​மல்ல நல்ல நீரி​லும் வளர்த்து அதிக லாபம் பெற​லாம் என தம்​பி​சாம்​ராஜ் தெரி​வித்​தார்.​ கேர் இந்​தியா தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் மோசஸ் சாமு​வேல் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​ 
 
கேர் இந்​தியா தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் மோசஸ் சாமு​வேல் பேசி​யது:​
 
                     கேர் இந்​தியா நிறு​வ​னம் கட​லூர் மாவட்​டத்​தில் 684 கிரா​மங்​க​ளில் பல்​வேறு பணி​களை மேற்​கொண்​டுள்​ளது.​ குறிப்​பாக சுனா​மி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு 394 வீடு​களை கட்​டிக் கொடுத்​துள்​ளது.​ மேலும் கிள்ளை பகு​தி​யில் உள்ள ரூ.34 லட்​சம் செல​வில் 7 சய​உ​த​விக் குழுக்​க​ளுக்கு களி​நண்டு வளர்ப்​புப் பயிற்சி அளிக்​கப்​பட்டு உற்​பத்தி செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ இதே​போன்று கிள்ளை பகு​தி​யில் உப்​ப​னாற்றை நம்பி மீன்​பி​டித் தொழி​லில் ஈடு​பட்​டுள்ள இரு​ளர் சமூ​கத்​தி​ன​ருக்கு 5 சுய​உ​த​விக் குழுக்​கள் மூல​மும்,​​ பரங்​கிப்​பேட்​டை​யில் 4 சுய​உ​த​விக் குழுக்​கள் மூலம் மீன் உற்​பத்தி செய்​யும் திட்​டத்தை செயல்​ப​டுத்த உள்​ளது என மோசஸ் சாமு​வேல் தெரி​வித்​தார்.​ க​டல் பொருள் ஏற்​று​மதி மேம்​பாட்டு ஆணைய உதவி இயக்​கு​நர் சி.ஜே.சம்​பத்​கு​மார் வர​வேற்​றார்.​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின அறி​வி​யல் புல பேரா​சி​ரி​யர் எஸ்.அஜ்​மல்​கான்,​​ கட​லூர் பொயட்ஸ் தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்.கார்த்​தி​கே​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர்.​ உதவி இயக்​கு​நர் ​(நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு)​ முனை​வர் எஸ்.கந்​தன் நன்றி கூறி​னார்.​ மீன் வளர்ப்​ப​வர்​க​ளுக்கு கொடுவா மீன் வளர்ப்​பது குறித்த பயிற்​சியை திட்ட மேலா​ளர் எஸ்.பாண்​டி​ய​ரா​ஜன்,​​ உத​வித் திட்ட மேலா​ளர் கே.கணேஷ் உள்​ளிட்​டோர் சின்​னத்​திரை மூலம் அளித்​த​னர்.​உதவி இயக்​கு​நர் ​(பொறி​யி​யல்)​ பி.பாசக் நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior