உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

எண்ணெய் வித்து திட்டப் பயிற்சி

​ ​சிதம்​ப​ரம்,​:
 
                                      சிதம்​ப​ரத்தை அடுத்த கிள்ளை பொன்​னந்​திட்டு கிரா​மத்​தில் விவ​சா​யி​களுக்கு ஐசோ​பாம் எண்​ணெய் வித்து திட்ட பயிற்சி அண்​மை​யில் நடை​பெற்​றது.​கிள்ளை பேரூ​ராட்சி தலை​வர் எஸ்.ரவிச்​சந்​தி​ரன் முன்​னிலை வகித்​தார்.​ கட​லூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்​கு​நர் ​(மத்​திய அரசு திட்​டங்​கள்)​ பாபு பயிற்​சியை தொடங்கி வைத்து உரை​யாற்​றி​னார்.​ மண் ஆய்வு செய்து உர​மி​ட​வும்,​​ மண் வளத்தை காத்​தி​ட​வும் வலி​யு​றுத்​து​வ​து​டன் அரசு வழங்கி வரும் பல்​வேறு மானிய திட்​டங்​களை விவ​சா​யி​கள் பயன்​ப​டுத்​துக் கொள்​ளு​மாறு அவர் கேட்​டுக்​கொண்​டார்.​ ப​ரங்​கிப்​பேட்டை வட்​டார வேளாண் உதவி இயக்​கு​நர் இ.தன​சே​கர் மணிலா மற்​றும் பிற எண்​ணெய் வித்​துப் பயிர்​க​ளில் சிறந்த மக​சூ​லுக்​கான உயர் சாகு​படி ​ தொழில் நுட்​பங்​கள் குறித்​தும்,​​ ஒருங்​கி​ணைந்த பயிர் பாது​காப்பு மற்​றும் இயற்கை உரங்​கள் மற்​றும் இயற்கை பூச்​சிக்​கொல்லி,​​ பூஞ்​சா​ணக்​கொல்லி மருந்​து​கள் பற்றி விரி​வாக எடுத்​து​ரைத்​தார்.​ ஐ​சோ​பாம் எண்​ணெய் வித்து திட்​டத்​தின் கீழ் பல்​வேறு மானி​யத் திட்​டங்​கள் குறித்து வேளாண் அலு​வ​லர் விஜயா உரை​யாற்​றி​னார்.​ மணி​லா​வில் நுண்​ணூட்​டக் கரை​கல் தெளித்​தல் பற்றி உதவி வேளாண் அலு​வ​லர் செல்​ல​துரை கூறி​னார்.​ இப்​ப​யிற்​சி​யில் 50-க்கும் மேற்​பட்ட விவ​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior