உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

புவனகிரி பேரூராட்சியில் சிமென்ட் மூட்டைகள் பாழ்

புவனகிரி:

                 புவனகிரி பேரூராட்சியில் கட்டுமான பணிக்கு வாங்கிய சிமென்ட் மூட்டைகள் பயன்படுத்தாமலே வீணாகியுள்ளன. புவனகிரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரசு மூலம் சிமென்ட் மூட்டைகளை வழங்கியது. இதில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படாத சிமென்ட் மூட்டைகள் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டதில் கெட்டியாகி வேறு பணிகளுக்கு உபயோகப் படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் பழைய பேரூராட்சி அலுவலகத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.  பழைய பேரூராட்சி அலுவலகத்தில் வைத்திருந்த சிமென்ட் மூட்டைகள் பேரூராட்சி மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின்  அருகே கொட்டப் பட்டு காட்சி பொருளாக கிடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior