உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

முந்​திரி சாகு​படி பயிற்சி


​ விருத்​தா​ச​லம்:
 
                   விருத்​தா​ச​லம் மண்​டல ஆராய்ச்​சிப் பண்​ணை​யில் முந்​திரி சாகு​படி குறித்த பயிற்சி தொடக்க விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ வி​ருத்​தா​ச​லத்​தில் உள்ள வேளாண் மண்​டல ஆராய்ச்சி நிலை​யத்​தில் முந்​திரி சாகு​படி குறித்த 10 நாள் பயிற்சி முகாம் அண்​மை​யில் தொடங்​கி​யது.​ இதில் முந்​திரி பருப்பு மற்​றும் பழங்​க​ளின் முக்​கி​யத்​து​வம்,​​ முந்​திரி ஏற்​று​ம​தி​யில் சந்தை வாய்ப்​பு​கள் மற்​றும் வழி​மு​றை​கள் பற்​றி​யும்,​​ முந்​திரி விளைச்​சலை அதிகரிக்கச் செய்ய வேண்​டிய மேலாண்மை தொழில்​நுட்​பங்​கள் குறித்​தும் விளக்கப்பட்டது.​ 
 
                    வி​ழா​வில் தமிழ்​நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்​கு​நர் ஜெய​ராஜ் தலைமை வகித்​தார்,​​ பேரா​சி​ரி​யர் முனை​வர் மாரி​முத்து,​​ விருத்​தா​ச​லம் வேளாண் அறி​வி​யல் நிலை​யப் பேரா​சி​ரி​யர் முனை​வர் சாத்​தையா,​​ மண்​டல ஆராய்ச்சி நிலைய இணைப் பேரா​சி​ரி​யர் அனீ​சா​ராணி உள்​பட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior