உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

போலி மது கடத்​தல்:​ மூவர் கைது


​ பண்​ருட்டி:

               புதுச்​சேரி மாநி​லத்​தில் இருந்து போலி மது​பாட்​டில்​களை கடந்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் கடத்​தப்​பட்ட மது பாட்​டில்​களும், கடத்​த​லுக்கு பயன்​ப​டுத்​திய இரு கார்​க​ளும் செவ்​வாய்க்​கி​ழமை பறி​மு​தல் செய்யப்பட்டன.​ புதுச்​சேரி மாநி​லத்​தில் இருந்து பண்​ருட்டி வழி​யாக மது பாட்​டில்​கள் காரில் கடத்​தப்​ப​டு​வ​தாக பண்​ருட்டி போலீ​ஸô​ருக்கு தக​வல் வந்​தது.​ இத​னைத் தொடர்ந்து இன்ஸ்​பெக்​டர் செல்​வம் தலை​மை​யில் காவ​லர்​கள் குண​சே​க​ரன்,​​ வடி​வேல்,​​ ராஜ​சே​கர்,​​ புக​ழேந்தி,​​ பால​மு​ரு​கன் ஆகி​யோர் பூங்​கு​ணம் அருகே வாக​னச் சோத​னை​யில் ஈடு​பட்​டி​ருந்​த​னர்.​ அப் போது அவ்​வ​ழியே அடுத்​த​டுத்து வந்த 2 கார்​களை நிறுத்தி சோதனை செய்​த​னர்.​ பின்​னால் வந்த காரில் 250 பெரிய அளவு மது பாட்​டில்​கள் கடத்தி வரப்​பட்​ட​தும்,​​ முன்​னாள் வந்த கார் பாது​காப்​புக்கு வந்​தது என​வும் தெரி​ய​வந்​தது.​ இது தொடர்​பாக காரில் மது பாட்​டில்​கள் கடத்தி வந்த போலீஸ் லைனை சேர்ந்த சுமன்​ராஜ் ​(21),​ திரு​வள்​ளு​வர் நகர் வெற்றி ​(18),​ ஆறு​மு​கம் ​(31) ஆகி​யோரை போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மேலும் தப்​பி​யோ​டிய ராஜி,​​ வெங்​க​டா​ஜ​லம் ஆகிய இரு​வ​ரைத் தேடி வரு​கின்​ற​னர்.​ பறி​மு​தல் செய்​யப்​பட்ட கார்​கள் மற்​றும் போலி மது​பாட்டி​லின் மொத்த மதிப்பு ரூ.3 லட்​சம் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior