உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள்

கடலூர்:

                     கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொது மக்கள் அவசர உதவியை நாட வேண்டும் என்பதற்காக போலீஸ் கன்ட்ரோல் ரூம் 100, தீயணைப்புத்துறை 101, ஆம்புலன்ஸ் 108 போன்ற மூன்று இலக்க எண்கள் அனைத்தும் இலவச அழைப்புகளாகும். மொபைல் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசியில் இருந்து இந்த எண்களுக்கு காசு இல்லாமல் பேச முடியும். இலவச அழைப்பு என்பதால் சில விஷமிகள் இந்த தொலைபேசிகளோடு விளையாட ஆரம்பித்துவிடுகின்றனர். மொபைல் போனில் இருந்து இந்த அவசர எண்களுக்கு டயல் செய்துவிட்டு பேசாமல் இருப்பது, இணைப்பு கிடைத்தவுடன் மொபைல் போனை குழந்தைகளிடம் கொடுத்துவிடுவது, வேறு ஏதாவது எண் களை சொல்லி வெட்டிக் கதை பேசி நேரத்தை வீணடிப்பது அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் முதலில் தீயணைப்புத்துறையினருக்கு அழைப்பு விடுப்  த்து, பின்னர் கான்பிரன்சில் 100க்கு டயல் செய்து இருவரையும் பேசவிடுவது.  அவ்வாறு 100ம் 101ம் மோதிக் கொள்வதை அமைதியாக இருந்து ரசிப்பது. இதுபோன்ற 'திருவிளையாடல்களை' சில விஷமிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். மொபைல் போன் 'சிம் கார்டுகள்' மலிவு விலையில் கிடைப்பதாலும், போலி முகவரி கொடுத்து    சிம்கார்டுகளை வாங்கி உபயோகிப்பவர்களும் இந்த சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் 'தொலைபேசி'  பணி பார்க்கும் தீயணைப்பு துறையினர் அழைப்புகளை அலட்சியப்படுத்த முடியாமலும், சில்மிஷ பேர்வழிகளுடன் வாக்குவாதம் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின் றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior