உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

விஷம் கலந்த மது​வைக் குடித்த பல்​கலை மாண​வர் உள்​ளிட்ட இரு​வர் கவ​லைக்​கி​டம்

சிதம்​ப​ரம்:
 
                 விஷம் கலந்த மது​வைக் குடித்த பல்​க​லைக்​க​ழக மாண​வர் உள்​ளிட்ட இரு​வர் கவ​லைக்​கி​ட​மான நிலை​யில் ராஜா முத்​தையா மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ பண்​ருட்டி சி.புதுப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​த​வர் சிவ​ரா​மன் ​(23).​ கவ​ரிங் நகை தயா​ரிக்​கும் கடை​யில் வேலை பார்க்​கும் இவ​ரும் சி.கொத்​தங்​கு​டி​யைச் சேர்ந்த பல்​கலை.​ மாண​வர் ஆனந்​த​பாபு ​(23) ஆகிய இரு​வ​ரும் அண்​ணா​ம​லை​ந​கர் திடல்​வெ​ளிப் பகு​தி​யில் செவ்​வாய்க்​கி​ழமை அதி​காலை மயங்​கிய நிலை​யில் கிடந்​துள்​ள​னர்.​
 
                 த​கவல் அறிந்த அண்​ணா​ம​லை​ந​கர் போலீ​ஸôர்,​​ இரு​வ​ரை​யும் ராஜா முத்​தையா மருத்​து​வ​மனை மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் சேர்த்​த​னர்.​ அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ க​டன் தொல்லை கார​ண​மாக சிவ​ரா​மன் தற்​கொலை செய்து கொள்ள விஷம் கலந்த மதுவை குடித்​துள்​ளார்.​ அப்​போது அங்கு வந்த அவ​ரது நண்​ப​ரும்,​​ பல்​கலை.​ மாண​வ​ரு​மான ஆனந்​த​பாபு அவ​ரி​டமி​ருந்து மதுவை விஷம் கலந்​துள்​ளது எனத் தெரி​யா​மல் பறித்து அருந்தியுள்ளார்.​ இ​த​னால் இரு​வ​ரும் மயங்கி விழுந்​துள்​ள​னர் என போலீஸ் விசா​ர​ணையில் தெரி​ய​வந்​துள்​ளது.​ ஆனந்​த​பாபு அண்​ணா​ம​லைப் பல்​க​லை​யில் எம்.காம்.​ படித்து வரு​கி​றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior