உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

தேர்வு துறையை கண்டித்து போராட்டம் : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு


கடலூர்:

                    அரசு தேர்வுத் துறையை கண்டித்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந் தது. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மண்டல செயலாளர் தனஞ்செயன், மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல், தலைமையிட செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்வு மதிப்பீட்டு பணியின் போது சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து வாயிற் கூட்டம் நடத்தும் உரிமையை, நன்னடத்தை விதி என்ற பெயரில் தட்டிப் பறிக்கும் அரசு தேர்வு துறையை கண்டித்து போராட்டம் நடத்துவது.  
 
                          விடைத்தாள் திருத்தும் மையங்களில் பல ஆண்டாக நடைமுறையில் இருந்து வரும் சிறப்பு கூர்ந்தாய்வு அலுவலர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும்.  விடைத்தாள் திருத்தும் பணிக்கு தாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை பெற்று, ஊதிய முரண்பாட்டை நீக்க மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும். மேல்நிலை கல்விக் கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். தேர்வு மையத்தை பார்வையிட வந்த தொடக்க கல்வி இணை இயக்குனர் கருணாகரன், ஆசிரியர்களை திட்டியதை கண்டிப் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior