உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

மாற்று திறன் மாணவிக்கு மூன்று சக்கர சைக்கிள்


சிதம்பரம்: 

                   மாற்று திறன்கொண்ட கல்லூரி மாணவிக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நலத்திட்ட உதவிக் வழங்கும் விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் அருண்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கேதார்நாதன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். அஷ்ரப் அலி வரவேற்றார். சி.முட்லூர் அரசு கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாற்று திறன்கொண்ட மாணவி சத்தியாவுக்கு மூன்று சக்கர சைக்கிள், பின்னத் தூர் நூலகத்திற்கு புத்தக ராக்குகள், மேஜைகள், நாற்காலிகளை மூத்த உறுப்பினர் லத்தீப்கான் வழங்கினார். நிகழ்ச்சியில் சி.முட் லூர் அரசு கல்லூரி ஆங்கில துறைத்தலைவர் சேரமான், முன்னாள் சங்க தலைவர்கள் நடனசபாபதி, நாராயணன், மகபூப் உசேன், யாசின், ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior