உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 2ம் கட்ட பயிற்சி

கடலூர்:

                    குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் குறித்து கணக்கெடுப்பு குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தமிழக அரசு குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. 200 சதுர அடி பரப்பளவில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த கான்கிரீட் வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதில் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்கின்றனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு அங்கேயே உறுதி செய்து வீட்டின் உரிமையாளரிடம் கையொப்பம் பெறப்படுகிறது. அதற்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ.,நடராஜன், திட்டஅலுவலர் ராஜஸ்ரீ  முன்னிலை வகித்தனர். இதில் பி.டி.ஓ., க்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior