உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

உலக தண்ணீர் தின விழா

கிள்ளை:

                    கிள்ளை, புவனகிரி பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.  கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணஸ்ரீ வரவேற்றார். அனைவருக் கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் மாறன், ஆசிரியர்கள் எஸ்தர் ஞானசெல்வகுமாரி, மணிமொழி முன் னிலை வகித்தனர். கிள்ளை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.  
 
புவனகிரி: 
 
                  திருவள்ளுவர் நகர் தொடக்கப் பள்ளியில்  நடந்த உலக தண்ணீர் தினவிழாவிற்கு   அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந் தராஜன், முன்னாள் தலைவர் பாரி பங்கேற்று மாணவர்களுக்கு தூய குடிநீர் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்  மாணிக்கவாசகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior