உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

சேத்தியாத்தோப்பில் தீ விபத்து : ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

 சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு அருகே ஏற்பட்ட தீ விபத் தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து சேதமானது.
 
                     சேத்தியாத்தோப்பு அடுத்த வடபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தராஜன்.  இவர் சென்னையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு குழந்தைகளுடன் சேத்தியாத்தோப்பிற்கு வந்தார். இதற்கிடையே அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பவுன் நகை, உளுந்து, பயறு, நெல்  தானியங்கள் உள்ளிட்ட  வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.  தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior