உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு : பி.டி.ஓ., தாசில்தார் ஆய்வு


பண்ருட்டி : 

          குடிசை வீடுகள் கணக் கெடுப்பு பணிகளை பி.டி.ஓ., மற்றும் தாசில் தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
                   பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூரை வீடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த 29ம் தேதி முதல் துவங்கியது. ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர், வி.ஏ.ஓ., கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இப்பணியை பி.டி.ஓ., தமிழரசி, உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், தனி தாசில்தார்கள் சரவணன், பத்மஜா, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் ஆகியோர்  ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது குடிசை வீடுகள்  கணக்கெடுப்பில் வழிகாட்டி நெறிமுறைகள் விடுபடாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior