உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

சப் இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பண்ருட்டியில் வழக்குகள் தேக்கம்

 பண்ருட்டி : 

             பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் இல்லாமல் வழக்குகள் தேக்கம் அடைந்து  வருகிறது.
 
           பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் 44  போலீசார் உள்ளனர். மற்ற பணிகளுக்கு 30 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள 14 பேர் ஸ்டேஷன் பணியில் உள்ளனர்.  சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டராக சித்ரா, அஸ்கர் அலி உள்ளனர். இதில் சித்ரா  மகப்பேறு விடுமுறையாக 5 மாதங்களாக விடுப்பில் உள்ளார்.  தற்போது  அஸ்கர் அலியும் மாற்று இடம் கேட்டு ஒரு மாத விடுப்பில் சென்று விட்டார். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மட்டுமே உள்ளார்.  பண்ருட்டியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வழக்கின் போதும் அரசியல் கட்சிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பண்ருட்டியில்  சப் இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு பணிபுரிய எவரும் முன்வருவதில்லை. இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்குகளும் தேக்கம் அடைந்துள்ளது.  முக்கிய பிரச்னைக்காக புகார் கொடுக்க வரும் போது சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior