உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி பட்டறை : துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்

 சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைபல்கலை தொலைதூர கல்வித் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறையை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.
 
                 அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்க மேலாண்மைத் துறை, மத்திய அரசு நுகர் வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் மையம் இணைந்து நுகர்வோர் பயிற்சி பட்டறையை மூன்று நாள் நடத்துகிறது. தொலைதூர கல்வி மேலாண்மைத்துறை பேராசிரியர் சையத் ஜாபர் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொலைதூர கல்வி இயக் குநர் நாகேஸ்வரராஜ் முன்னிலை வகித்தார்.
 
                     சிறப்பு விருந்தினராக டில்லி ஐ.ஐ.பி.ஏ., பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா பங்கேற்று, நுகர்வோர் புகாரின் விகிதாச்சாரத்தை விளக்கி நுகர்வோரின் விழிப்புணர்வை எந்தந்த துறைகளில் அமைய வேண்டும் என விளக்கினார். தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவர் தேவராஜன் நுகர் வோர் விழிப்புணர்வின் பல்வேறு கடமைகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சிவசுப்ரமணியன் பட்டறையின் தேவை மற்றும் இயல்புகளை விளக்கினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior