உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

நெய்வேலிக்கு ஜெ., வருவதால் அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம்

 நெய்வேலி : 

             நெய்வேலியில் ஜெயலலிதா வருகையையொட்டி, விழா ஏற்பாடுகளை அ.தி. மு.க.,வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
 
          நெய்வேலி டவுன்ஷிப், பிளாக் 4ல் உள்ள செயின்ட் பால் பள்ளி அருகே, கடந்த 1992ம் ஆண்டு நிறுவப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி. ஆர்., சிலையை, வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு ஜெ., திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் 4.30 மணிக்கு, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலில், மின் பற்றாக்குறையை கண்டித்து நடக் கும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு. க.,வினர்  உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். பாதுகாப்புக்காக வரும் ஆயிரக் கணக்கான போலீசார் தங்க, நெய்வேலி நகர எல்லைக்குள் உள்ள ஐந்து பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நெய்வேலி நகரில் பல பகுதிகளிலும் தி.மு.க., சார்பில் விளம்பரம் எழுதப் பட்ட சுவர்களில், ஜெயலலிதா வருகைக் காக அ.தி.மு.க.,வினர் விளம்பரம் எழுத முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதட் டத்தைத் தொடர்ந்து, டவுன்ஷிப் இன்ஸ் பெக்டர் சேகர், இரு தரப்பு நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில், சுவர் விளம்பரம் எழுதிக் கொள்ள தி.மு.க.,வினர் ஒப்புதல் தெரிவித்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior