உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

4 மையங்களில் குரூப் 2 தேர்வு 14,371 பேர் எழுதினர்


கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தொகுதி 2 நிலை அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் மாவட்டம் முழுவதும் 4 மையங்களில் 14 ஆயிரத்து 371 பேர் பங்கேற்றனர்.
 
                  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று  தமிழகம் முழுவதும் தொகுதி 2 அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நான்கு மையங்களில் 38 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடந்தது. இதில்  14 ஆயிரத்து 371 பேர்  பங்கேற்றனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் எளிதில் மையங்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல்  இருக்க கடலூர் டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் சப் கலெக்டர், டி.எஸ்.பி., நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior