உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

 சிதம்பரம் : 

              அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் பள்ளி செல்ல குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்தது.
 
           பரங்கிப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவசண்முகம் பணியை துவக்கி வைத்தார். சம்மந்தம் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, கவுன்சிலர் ரங்கன் பங்கேற்றனர். 

               கீரப்பாளையம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்பார்வையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 15ம் தேதி வரை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
 
விருத்தாசலம்: 

                       புலியூர் ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் பள்ளி செல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் சுரேஷ், தேவராஜன் ஆகியோர் 14 வயதிற் குட்பட்ட பள்ளி செல்லா மாணவர்களை கணக்கெடுத்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior