உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

துல்லிய பண்ணை திட்டம்: விவசாயிகளுக்கு இடுபொருள்

 நெல்லிக்குப்பம் : 

              அண்ணாகிராமம் வட்டாரத்தில் துல்லிய பண்ணை திட்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
 
                     அண்ணாகிராமம் அடுத்த பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருபது எக்டர் பரப்பில் கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் அமைக்கப்பட்டது. இருபது விவசாயிகள் சங்கம் அமைத்து பதிவு செய்து இத்திட்டம் மூலம் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்களுக்கு நீரில் கரையும் உரங்கள் ஒரு எக்டருக்கு 20 ஆயிரம் மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி இடு பொருட்கள் வழங்கி கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் சம்பத்குமார், சந்திரராசு, இ.ஐ.டி., பாரி முதுநிலை மேலாளர் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior