உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

புதுச்சேரியிலிருந்து பிராந்தி கடத்தல் இருவர் கைது: ஆட்டோ பறிமுதல்


கடலூர் : 

                   புதுச்சேரியிலிருந்து ஷேர் ஆட்டோவில கடலூருக்கு பிராந்தி பாட்டில் கடத்திய சம்பவம் தொடர் பாக இருவர் கைது செய் யப்பட்டனர். ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
 
                       கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ஆல் பேட்டை செக்போஸ்ட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப் போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ (டி.என்.31. ஏபி-6689)வை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டைகளில் 96 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களும், 20 லிட்டர் சாராயம் கடத்தி வருவதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7,000  ரூபாய். பிராந்தி மற்றும் சாராயம் கடத்தி வந்த கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் திருநாவுக் கரசு (29), ஷேர் ஆட்டோ டிரைவரான கடலூர் புதுவண்டிப்பாளையம் முருகா நகரை சேர்ந்த பாவாடைராயன் (23) ஆகியோரை கைது செய்தனர்.  கடத்தலுக்கு பயன்படுத்திய ஷேர் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior