உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மாயம்

 கடலூர் : 

                  கடலில் மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மாயமானார்.
 
                   கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ஏசுதரன் மகன் விஜி ((29). இவரும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்களான சகாயம் ஆன்ட்ரோஸ் (29), சூசை அடிமை (32) ஆகியோர் தங்கள் மாவட்டத்தில் மீன் சீசன் இல்லாத நேரங்களில் கடலூரில் தங்கி மீன் பிடித் தொழில் செய்வது வழக்கம். அதேபோன்று மூவரும் கடந்த ஒரு மாதமாக கடலூர் முதுநகர் சலங்கைகாரத் தெருவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தனர். நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு மூவரும் தங்களது படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டு மதியம் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விஜி படகை ஓட்டி வந்தார். மற்ற இருவரும் தூங்கி விட்டனர். பகல் 12 மணிக்கு எழுந்து பார்த்தபோது விஜியை காணவில்லை. படகில் வெகுதூரம் சென்று தேடியும் விஜியை காணவில்லை.  இது குறித்த புகாரின் பேரில்  கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விஜியை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior