உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

சீரமைக்கப்பட்ட பாலத்தின் தடுப்புச் சுவர்கள் மீண்டும் உள்வாங்கும் அபாய நிலை


ராமநத்தம் : 

          சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தம் வெள்ளாற்று பாலம், வெலிங்டன் வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கும் அபாய நிலை உள்ளது.
 
              சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர்- பெரம்பலூர் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் வெள்ளாறு, வெலிங்டன் வரத்து வாய்க்கால் அமைந்துள்ளது. இதில் இருவழி சாலையாக இருந்த போது போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண் டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பிறகு புதிதாக வெள்ளாறு மற்றும் வெலிங்டன் வாய்க்காலில் பாலம் அமைக் கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
 
            தற்போது புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திற்கும், பழைய பாலத்திற்கும் இடையே உள்ள பகுதி வாகனங்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தாதவாறு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்புச் சுவர்கள் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால் அமைத்த சில மாதங்களிலேயே உள்வாங்கியது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து உடனடியாக தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால், புதியதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களும் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கும் நிலையில் காணப்படுகிறது. இதனை எழுத்தூர் - பாடாலூர் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் அதிகாரிகள் முறையாக மறு சீரமைப்பு பணி மேற் கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior