உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பதிவாளர் கட்டடம்

 கடலூர்: 

               கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் என்ற துறையின் முடிவின்படி தழிழகத்தில் உள்ள பல்வேறு பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கலெக்டர் அலுவலத்தின் ஒரு பகுதியில் தனியாக இயங்கி வருகிறது. திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் கட்டடம் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்காக அரசு 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டுவற்காக பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சார் பாதிவாளர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள பில்லர் கம்பிகள் இணைக்கும் பணிக்காக கட்டை உடைக்கப் பட்டுள்ளது.  இக்கட்டடத்தில் எண் 1 சார் பதிவாளர் அலுவலகம், எண் 2 அலுவலகம் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம், மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டித் தெருவில் இயங்கி வரும் டி.ஐ.ஜி., அலுவலகம் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவாளர் துணை அலுவலகங்கள் இயங்கும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior