உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

நினைவாற்றல் பயிற்சி துவக்கம்


கடலூர்: 

                  வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வரும் 10ம் தேதி கடலூரில் துவங்குகிறது. ரவிசங்கர்ஜியின் வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி கடலூர் லட்சுமிசோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியில் வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. பயிற்சி 11ம் தேதி முதல் 15ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அளிக்கப்படும். இப்பயிற்சியில் பங்குபெறும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரித்து, கல்வியிலும், செய்யும் வேலையிலும், முழுமையாக கவனம் செலுத்த முடியும். மேலும் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளும் பண்பினை வளர்க்கும். குழந்தைகளின் கோபம், பிடிவாதம், பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை நீக்கி ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கும். அவர்களின் ஏமாற்ற உணர்வுகளை நீக்கி மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். இப்பயிற்சி 8 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கு மட்டும் அளிக்கப்படும் என வாழும் கலை மைய பொறுப்பாளர் வினோபா தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior