உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

பண்ருட்டியில் பெண்கள் பள்ளிக்கு இடம் ஆய்வு

 பண்ருட்டி: 

                 பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்காக அரசுக்கு சொந்தமான இடத்தை தாசில்தார் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு செய்ய கலெக்டர் சீத்தாராமன் கடந்த 1ம் தேதி பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாபு பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள நகராட்சி மைதானம் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த இடம் 1. 25 ஏக்கர் பரப்பளவில் இருந்ததால் மேலும் இடம் தேவை என்பதால் பக்கத்தில் உள்ள தனியார் இடத்தை வாங்க முடிவு செய்தனர். நகரமைப்பு சர்வேயர் அழகேசன், வி.ஏ.ஓ., சையத் இப்ராகீம், தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior